search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்ப்பாக்கம் பணம் பறிப்பு"

    கீழ்ப்பாக்கத்தில் ஏ.டி.எம்.மில் தனியார் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    சென்னை:

    ஆதம்பாக்கம் குமரபுரத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் லேண்டன்ஸ் ரோட்டில் உள்ள ஏ.டி.எம்.மில் பணத்தை செலுத்த சென்றார். பர்சில் இருந்து பணத்தை எடுத்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஒரு திருநங்கை மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

    ராயப்பேட்டை, புதுப்பேட்டை கார்டன் சந்து பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி மோனிஷா இவர்கள் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நியூ ஆவடி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மோனிஷா வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். அதில் 2 செல்போன், ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். #Robbery

    ×